Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் ரொம்ப ஸ்டிரிக்ட்; வேட்பாளர்களை கேள்வி கேட்டு துளைத்தெடுத்த கமல்

நான் ரொம்ப ஸ்டிரிக்ட்; வேட்பாளர்களை கேள்வி கேட்டு துளைத்தெடுத்த கமல்
, திங்கள், 11 மார்ச் 2019 (18:36 IST)
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போடியிடும் வேட்பாளர்களுக்கான நேர்முக தேர்வு இன்று நடத்தப்பட்டது. கமல் மற்றும் கட்ச்யின் முக்கிய தலைவர்கள் பலர் இதர்கு தலைமை ஏற்றனர். 
 
வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் என் அமுடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட உள்ளது. 
 
இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்கள் மூலம் மக்கள் நீதி மய்யம் மூலம் இன்று தேர்வு செய்யப்பட்டார்கள். அதாவது, 40 தொகுதிக்கு விருப்பமனு தெரிவித்தவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.
webdunia
இந்த நேர்முக தேர்வில் பல விஷயங்கள் குறித்து இதில் கேள்வி கேட்கப்பட்டதாம். அரசியல் அறிவு, போட்டியிடும் தொகுதியில் உள்ள பிரச்சனை, இதற்கு முன் செய்த நற்காரியங்கள் என்று பல்வேறு விஷயங்கள் இதில் கேள்வியாக கேட்கப்பட்டு இருக்கிறது.
 
வேட்பாளர் கொடுக்கும் பதிலுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் பின்புலத்தை விட, அரசியல் அறிவு குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டதாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொள்ளாச்சி இளம்பெண்கள் வீடியோ விவகாரம்! அதிமுக தலைமை அதிரடி