Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயமரியாதை இருந்தால் ஒடிசாவிடம் பாடம் கற்கட்டும்: கமல் காட்டம்

Webdunia
ஞாயிறு, 5 மே 2019 (13:48 IST)
ஃபானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தபோது அந்த மாநிலத்தின் பெரும் பகுதியை பயங்கர சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. 
 
ஒடிசா தலைநகர் புவனேஷ்வர், பூரி உள்ளிட்ட பகுதிகள் உருக்குலைந்து காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேறோடு கீழே விழுந்துள்ளது. ஆனால், உயிர்ச்சேதம் பெரிய அளவில் இல்லாமல் தடுக்கப்பட்டது. 
 
ஒடிசா மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலர் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா அரசை மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார். 
 
கமல் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ஃபானி புயலை ஒடிசாவில் கையாண்ட விதம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒடிசா மாநில அரசுக்கு பாராட்டுக்கள். 
 
சுயமரியாதை உள்ள எந்தவொரு அரசும் ஒடிசாவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு இன்னும் கஜா புயலை நினைத்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments