Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயமரியாதை இருந்தால் ஒடிசாவிடம் பாடம் கற்கட்டும்: கமல் காட்டம்

Webdunia
ஞாயிறு, 5 மே 2019 (13:48 IST)
ஃபானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தபோது அந்த மாநிலத்தின் பெரும் பகுதியை பயங்கர சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. 
 
ஒடிசா தலைநகர் புவனேஷ்வர், பூரி உள்ளிட்ட பகுதிகள் உருக்குலைந்து காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேறோடு கீழே விழுந்துள்ளது. ஆனால், உயிர்ச்சேதம் பெரிய அளவில் இல்லாமல் தடுக்கப்பட்டது. 
 
ஒடிசா மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலர் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா அரசை மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார். 
 
கமல் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ஃபானி புயலை ஒடிசாவில் கையாண்ட விதம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒடிசா மாநில அரசுக்கு பாராட்டுக்கள். 
 
சுயமரியாதை உள்ள எந்தவொரு அரசும் ஒடிசாவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு இன்னும் கஜா புயலை நினைத்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments