Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வார்டாக மாறிய காய்கறி சந்தை : பொதுமக்கள் போராட்டம்!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 19 மார்ச் 2020 (16:33 IST)
திருச்சியில் புதிதாக தொடங்கப்பட்ட காய்கறி சந்தை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் பிரபலமான காந்தி மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக புறநகர் பகுதியான கள்ளிக்குடியில் 700 கடைகளை கொண்ட ஒருங்கிணைந்த விற்பனை சந்தை கட்டப்பட்டிருந்தது. ஆனால் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கள்ளிக்குடி புதிய மார்க்கெட்டுக்கு மாற விரும்பவில்லை. மேலும் புறநகர் பகுதியில் இருப்பதால் விற்பனை மந்தமாகும் என அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா அறிகுறிகளுடன் திருச்சி வருபவர்களை பரிசோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் புதிய மார்க்கெட் கட்டிடம் கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கள்ளிக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளிக்குடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு !