Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (12:22 IST)
நீட் தேர்வு பயம் காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் என்ற பகுதியைச் சேர்ந்த மாணவி பைரவி என்பவர் கடந்த சில மாதங்களாக நீட் பயிற்சி பெற்று வந்த நிலையில் அவர் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். 
 
நேற்று முன்தினம் விஷம் அருந்திய நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி பைரவி என்ற உயிரிழந்தார். நீட் தேர்வு அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
 ஒரு பக்கம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற போலியான வாக்குறுதிகள் அரசியல்வாதிகளால் கொடுக்கப்படும் நிலையில் இன்னொரு பக்கம் அந்த வாக்குறுதியை நம்பி மாணவ மாணவிகள் தங்கள் இன்னுயிரை இழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments