Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (18:42 IST)
அதிமுகவை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரனை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சமீபத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், பிரபு எம்.எல்.ஏ ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பிரபு எம்.எல்.ஏ தியாகதுருகம் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆகிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நடவடிக்கையை அடுத்து பிரபு எம்.எல்.ஏ, டிடிவி தினகரனின் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து 18க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனை ஆதரித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ தினகரனின் அணியில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments