Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் குவிந்து கிடந்த கள்ளக்குறிச்சி பள்ளியில் சூறையாடப்பட்ட பொருட்கள்!

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (10:09 IST)
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தின் போது பல பொருட்களை போராட்டக்காரர்களில் சிலர் தூக்கிச் சென்றது இணையத்தில் வெளியானது.

கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மரணமடைந்ததையடுத்து ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த கலவரத்தில் பள்ளிக்கூடச் சொத்துகள்சூறையாடப்பட்டிருக்கின்றன. காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிது.இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்கள் கலவரக்காட்சிகள் வீடியோக்களாக வெளியாகி அதிகளவில் பரவின. இதையடுத்து சிறுமியின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கலவரத்தின் போது சிலர் பள்ளியின் மேஜை, பென்ச், சிலிண்டர் போன்ற பொருட்களை எடுத்துச் சென்றனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகின. இந்நிலையில் எடுத்த பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு அந்த பகுதிகளில் தண்டோரா மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதையடுத்து பலரும் தாங்கள் எடுத்த மேசை, பென்ச் மற்றும் இன்னும் பிற பொருட்களை சாலையின் ஓரங்களில் எடுத்துவந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments