Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை! – போலீசார் துப்பாக்கிச்சூடு!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (11:21 IST)
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சையான நிலையில் போராட்டம் நடந்த இடத்தில் வன்முறை வெடித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த பள்ளி மாணவி கடந்த சில தினங்கள் முன்னதாக பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், மாணவி தற்கொலைதான் செய்து கொண்டாரா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று வரை அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டத்தில் திடீரென இன்று கலவரம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கிய நிலையில், போலீஸார் போராட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுளனர். பலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்குள் புகுந்து அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசாரின் காவல் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். இந்த திடீர் கலவரத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

புனே இளம்பெண் பாலியல் பலாத்காரம் விவகாரம்.. கொரியர் நபர் அந்த பெண்ணுக்கு நண்பரா? திடுக்கிடும் தகவல்..!

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments