Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

J.Durai
சனி, 20 ஏப்ரல் 2024 (11:13 IST)
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகைஆற்றில் இறங்கும் நிகழ்வு 
வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது 
 
இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
 
இன்றிலிருந்து வருகிற 23ஆம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று வைகை பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
அணையில் உள்ள நீர்மின்நிலையம் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மதுரையை விரைவில் சென்றடையும் வகையில் வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை வைகை பொதுப்பணித்துறையினர் திறந்து வைத்தனர்.
 
மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போதைய நிலவரப்படி  59.17 அடியாகவும் அணையில் நீர் இருப்பு 3454 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கருக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்குமா?

தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானத்தில் பயணம் செய்தவர்கள் பலி..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அதை இப்போது சொல்ல முடியாது.. ராஜ்ய சபா எம்பி பதவியேற்க இருக்கும் கமல் பேட்டி..!

9.42 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments