ஓபிஎஸ் பாச்ச பலிக்காது; அதிமுகவில் ஒற்றை தலைமையே !

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (12:21 IST)
ஒற்றை தலைமை கொள்கையில் மாற்றமில்லை என அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ பேட்டி.


அதிமுக பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்கள் எதுவும் செல்லாது என சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டனர்.

இந்நிலையில் அதிமுகவில் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர்களையும் இணைத்துக் கொள்வோம் என்றும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து செயல்படுவது சாத்தியமா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்படி குழப்பமான சூழல் இருக்கும் நிலையில் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ,  ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட்டு முடிவு செய்து விட முடியாது. அரசியல் கட்சியை பொறுத்தவரை கட்சியை வழி நடத்துவது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தான். ஒற்றை தலைமை கொள்கையில் அதிமுகவினர் கருத்தில் மாற்றமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments