Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் பணியாளரை மிரட்டிய விவகாரம்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

தேர்தல் பணியாளரை மிரட்டிய விவகாரம்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு
, ஞாயிறு, 14 மார்ச் 2021 (14:49 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியாளரை மிரட்டிய விவகாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிட உள்ளார். தேர்தல் நடத்தை கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்ற வாகனத்தை தேர்தல் பணியாளர் மாரியப்பன் என்பவர் சோதனை செய்துள்ளார்.

இதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்ததுடன் மாரியப்பனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தேர்தல் பணியில் உள்ள மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது இரண்டு பதிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீணாகும் உணவு : மொத்தம் 900 மில்லியன் டன்கள் குப்பைத்தொட்டியில்