Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு.. சந்துருவின் பதவிக்காலம் நீட்டிப்பு

Mahendran
திங்கள், 1 ஏப்ரல் 2024 (11:46 IST)
தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்கும் சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சாதி வன்முறை எதிரொலியாக, சந்துரு தலைமையில் குழு தமிழக அரசு அமைத்தது. இந்த குழு பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் உருவாகும் வன்முறைகளை தவிர்ப்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்து வருகிறது.
 
ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவின் இந்த குழு பிப்ரவரி மாதம் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த குழுவின் கால நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
 
இதனையடுத்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் உருவாகும் வன்முறைகளை தவிர்ப்பது குறித்து முழு ஆய்வு செய்து வரும் மே 31ஆம் தேதிக்குள் இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்பது குறிப்பிட்த்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு..!

கனடா, மெக்சிகோவுக்கு 25% வரி.. சீனாவுக்கு எவ்வளவு? ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு,,!

வழிப்பறி சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை உதவி ஆய்வாளர் கைது.. சிறையில் அடைப்பு..!

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments