Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2ஜி ஸ்பெக்ட்ரம்: நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு!!

2ஜி ஸ்பெக்ட்ரம்: நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு!!
, செவ்வாய், 24 அக்டோபர் 2017 (20:38 IST)
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பிரச்சினை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. இந்த வழக்கின் தீர்ப்பு தேதியை நாளை அறிவிக்கவுள்ளது.


 
 
மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. 
 
இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 
 
வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,  அக்டோபர் 25 ஆம் தேதியன்று (நாளை) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல்: விவரம் உள்ளே...