பெற்றோர் தான் காரணம்.. ஆன்லைன் கேம் குறித்து நீதிபதி கருத்து!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (12:49 IST)
ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகளை 18 வயதுக்கும் குறைவானவர்கள் விளையாடுவதற்கு பெற்றோர் தான் காரணம் என ஆன்லைன் கேம் குறித்த வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
 
18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி போன்ற கேம்கள் விளையாடுவதை தவிர்க்கும் வகையில், செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு  பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
 
மேலும் 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் தெரியவந்தது எப்படி? அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது" என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேதனையுடன் தெரிவித்துள்ளது.
 
பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்துவிட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை; நாமே குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்து விடுகிறோம். பின்பு அரசை குற்றம் சாட்டுவது எப்படி? எனவும் நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments