Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத சங்கரமட இளைய மடாதிபதி: நீதிபதியின் அதிரடி கருத்து

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத சங்கரமட இளைய மடாதிபதி: நீதிபதியின் அதிரடி கருத்து
, வெள்ளி, 10 டிசம்பர் 2021 (18:55 IST)
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத சங்கரமட இளைய மடாதிபதி: நீதிபதியின் அதிரடி கருத்து
2018 ஆம் ஆண்டு காஞ்சி இளைய மடாதிபதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது மேடையில் இருந்த அனைத்து தலைவர்களும் எழுந்து நின்றபோது காஞ்சி மடாதிபதி இளைய மடாதிபதி மட்டும் இருந்த கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்
 
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
இந்த விசாரணையின்போது தமிழ் தாய் வாழ்த்து என்பது இறைவணக்கப் பாடல் தான் என்றும் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி இருப்பதுபோல் தமிழ் தாய் வாழ்த்து பாட போது எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் நிறுவனத்திற்கு 10 கோடி அபராதம்