Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Advertiesment
Ponmudi

Mahendran

, வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (10:53 IST)
அமைச்சர் பொன்முடி குறித்த செம்மண் குவாரி வழக்கு விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
விழுப்புரம் மாவட்டத்தில்  செம்மண் எடுத்து முறையீடு செய்ததாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது பொன்முடி மற்றும் கௌதம சிகாமணி ஆகியோர் ஆஜராகவில்லை என்றாலும் நான்கு பேர் ஆஜரானதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் கூடுதலாக சாட்சியை சேர்த்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு விசாரணைக்காக இவ்வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
அன்றைய தினம் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராகவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றி நிச்சயம்.. நல்லதே நடக்கும்.. தவெக கொடியை அறிமுகம் செய்து விஜய் பேச்சு..!