Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (16:04 IST)
நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  
 
அமைச்சர் பெரியசாமி, வளர்மதி ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்க இருக்கும் தன்னை வில்லன் போல் சிலர் பார்ப்பார்கள் என்று கூறிய நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ், லஞ்ச ஒழிப்பு துறையின் நடைமுறை மோசமாக இருப்பதாக தெரிவித்தார். 
 
வளர்மதி வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவரிடம் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அதிகாரியே மேல்விசாரணையின் போது வழக்கை முடித்து வைக்க கோரி இருக்கிறார் என்றும் அவர் கூறினார். 
 
அதேபோல் அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிக்க கூடிய மனுவையும் வழக்கை ரத்து செய்ய கோரி கோரிய மனுவையும் அவர் தள்ளுபடி செய்ததையும் குறிப்பிட்டுள்ளார் 
 
தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை என்று கூறிய அவர் நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் வேதனையுடன் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி எஸ்பிஐ வங்கி தொடங்கி லட்சக்கணக்கில் மோசடி.. 4 இளைஞர்களிடம் விசாரணை..!

காலையில் பாஜக.. மாலையில் காங்கிரஸ்! கட்சிக்கு கட்சி தாவும் பலே முன்னாள் எம்.பி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. என்ன காரணம்?

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம்: முழு விவரங்கள்..!

கனவில் வந்து கூறிய கடவுள்.. திருடிய சிலையை கொண்டு வந்து கொடுத்த திருடன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments