எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.. காத்திருக்கும் அதிரடிகள்..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (07:44 IST)
ஜனவரி 2 முதல் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார் என தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 தமிழகத்தின் முன்னாள் இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை வழக்குகளை விசாரணை ஜனவரி 2 முதல் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னாள் அமைச்சர் பொன்முடி,  தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி ஆகியோர்களை வழக்குகளும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா வளர்மதி ஆகியோர்களின் வழக்குகளும்  மறு ஆய்வு செய்யும் விதமாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை செய்ய இருந்தார்

ஆனால் திடீரென அவர் மதுரைக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் ஜனவரி 2 முதல்  மேற்கண்ட வழக்குகளை விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இதனால் 2024 ஆம் ஆண்டு பரபரப்பாக இருக்கும் என்று தெரிகிறது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments