30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

Siva
வியாழன், 5 ஜூன் 2025 (18:25 IST)
பிரபல பத்திரிகையாளர் மணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதமாகி வருகின்றன. 
 
1996-ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு  ஒருமணி நேரத்திற்கு முன்பே டிராபிக் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் சிக்கல்களை சந்தித்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
 
இப்போது, அதே பாணியில் தமிழக முதலவர் ஸ்டாலின் ‘ரோட் ஷோ’ நடத்துவதாக கூறி, நகரப் போக்குவரத்தை தடைபடுத்துகிறார் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
 
30 வருடங்களுக்கு முன் ஜெயலலிதா செய்த தவறையே தற்போது ஸ்டாலின் செய்கிறார் என்றும், இதற்கெல்லாம் ஒரு காரணம் விஜய்யை கண்டு அச்சம் தான் ஏற்படுகிறது எனவும், இதற்குப் பின்னணி வேறு ஒன்றில்லை என்றும், நடிகர் விஜய் தனது ரோட்ஷோவில் பெற்ற ஆதரவை பார்த்து கலக்கம் அடைந்த திமுக, அதற்கு பதிலடியாக இதைப் போன்று ஜனக்கூட்டம் காண்பிக்கும் நிகழ்வுகளை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
 
மக்கள் ஆதரவை நிரூபிப்பதற்கான முறையான வழியல்ல இது என்றும், இந்த அணுகுமுறை தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments