Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

Siva
திங்கள், 1 ஜூலை 2024 (21:49 IST)
ராகுல் காந்தி இன்று பாராளுமன்றத்தில் ஆவேசமாக முழங்கியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் யார் ராகுல் என்று கேட்டவர்களுக்கு தக்க பதிலடி கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது”

ராகுல் காந்தி என்கிற எதிர்க்கட்சித் தலைவர் என்ன செய்வார் என்பதை இன்று நாடாளுமன்றத்தில் நிரூபித்தார் ராகுல்.

 "யார் ராகுல் ?"  என்று ஆணவத்தோடு கேட்ட பிரதமர் மோடியையும்,பாஜகவையும் நாடாளுமன்றத்தில் வைத்து பங்கம் செய்தார் ராகுல்.

எதிர்க்கட்சிகளின் குரலாகவும், மக்களின் குரலாகவும் உண்மையின் குரலாகவும்  அவர் ஒலித்தார். அன்பின் வடிவமாக அவர் அவையில் நின்றார்.

அதை எதிர்கொள்ள முடியாமல் ஒட்டு மொத்த அரசாங்கமும் அலறியது. ஆனால் நாடு அவரைக் கொண்டாடி கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் வெற்றி.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments