Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரைவிட்டு ஓடியவர் டிடிவி – ஜெயக்குமார் விளாசல் !

Webdunia
புதன், 15 மே 2019 (15:17 IST)
எம்.ஜி.ஆர். ஆட்சியை ஜெயலலிதா கலைத்ததாகக் கூறிய டிடிவி தினகரன் கூறியதை அடுத்து அவரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

எம்.ஜி.ஆரின் ஆட்சியை ஜெயலலிதா கலைத்ததாக சமீபத்தைய தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியிருந்தார். இதற்கு அதிமுகவினர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ’அவரின் பேச்சை அதிமுகவின் உண்மையானத் தொண்டர்கள் யாரும் நம்பமாட்டார்கள். ஜெயலலிதாவையேக் குற்றம் சொல்லும் துரோகத்தை அவர் செய்துள்ளார். அவருக்கு எம்.பி. பதவி அளித்தது தான் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறி என நினைத்து அவரை வீட்டுப்பக்கமே வரக்கூடாது என ஆணையிட்டவர் ஜெயலலிதா. அதனால் 10 ஆண்டுகள் ஊரைவிட்டே ஓடியவர் அவர். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் ஜெயலலிதாவையேக் குறை சொல்ல ஆரம்பித்து விட்டார் அவர்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments