Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஒருவேளை நான் விளையாடி இருந்தால் இந்தியா வென்றிருக்கும்”…அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (10:33 IST)
உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்று வெளியேறிய நிலையில், தான் நேற்றைய போட்டியில் விளையாடி இருந்தால் இந்தியா வென்றிருக்கும் என அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் மோதியதில் கடும் தோல்வியடைந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது.

இதனை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மக்களவைத் தேர்தலில் அதிமுக சிறு தோல்வியடைந்தது போல், இந்தியா அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்றும், ஒரு வேளை நேற்றைய போட்டியில் தான் விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கும் எனவும் கூறினார்.

மேலும் அவர், எதிர்காலத்தில் அதிமுக வெற்றி பெறும்போது, இந்திய அணியும் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments