Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”திமுக கூட்டணிக்கு சரியான குட்டு”.. விளாசும் ஜெயகுமார்

Arun Prasath
புதன், 11 டிசம்பர் 2019 (15:35 IST)
உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் திமுக கூட்டணிக்கு சரியான குட்டு வைத்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பயன்படுத்தப்படவில்லை என திமுக கூட்டணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

திமுக உள்ளாட்சி தேர்தலை குறித்து இதற்கு முன் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து திமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்த பார்க்கிறது எனவும், தேர்தலுக்கு திமுக அஞ்சுகிறது எனவும் அதிமுகவினர் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், ”உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் திமுக கூட்டணிக்கு சரியான குட்டு வைத்துள்ளது” என கூறியுள்ளார். மேலும் அவர், “உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக கையாண்ட யுக்திகள் தோல்வியடைந்துள்ளன” எனவும் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments