Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’அதிரிச்சி’ - ஜெயலலிதா உடல்நலக்குறைவு: தற்கொலை செய்துக்கொண்டால் ரூ.3 லட்சம்

’அதிரிச்சி’ - ஜெயலலிதா உடல்நலக்குறைவு: தற்கொலை செய்துக்கொண்டால் ரூ.3 லட்சம்
, ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (14:15 IST)
முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த வியாழன் அன்று இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

 

 
இதை அடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு  அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்தனர்,  
 
ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு குறித்து கேள்விப்பட்ட தஞ்சை மாவட்ட பட்டுக்கோட்டை 11வது வார்டு அதிமுக செயலாளர் டி.மகேந்திரன் (54) அதிர்ச்சியில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை காரணம் காட்டி யாராவது தற்கொலை செய்துக்கொண்டால், அதிமுக மேலிடத்தில் இருந்து மூன்று லட்சம் பணம் வாங்கி தருவதாக செய்திகள் பரவி வருகிறது.

கடந்த வருடம் ஊழல் குற்றச்சாட்டில் பெங்களூர் சிறையில் ஜெயலலிதா அடைக்கப் பட்டபோது, அதிமுக தொண்டர்கள் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை மாய்த்தனர். இதை அடுத்து, சிறையில் இருந்து மீண்டு வந்ததும், ஜெயலலிதா, இறந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் உதவி தொகை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த பெண்ணின் மனசு யாருக்கு வரும்!