Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா குணமடைந்து விட்டார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்!

ஜெயலலிதா குணமடைந்து விட்டார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்!

Advertiesment
ஜெயலலிதா
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (12:49 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராகிவிட்டதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் நள்ளிரவில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டார்.
 
இந்நிலையில் நேற்று இரவு முதலே அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். நள்ளிரவு முதலே முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வந்தாலும் அவர் டிஸ்சார்ஜ் ஆகவில்லை.
 
இதனால் அவரது உடல் நிலை குறித்து பலரும் அச்சத்தில் இருந்தனர். இதனையடுத்து இந்த அச்சத்தை போக்கும் விதமாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார், அவருடைய காய்ச்சர் குணமடைந்து விட்டது. இன்று காலை வழக்கம் போல் அவர் எடுத்துக்கொள்ளும் உணவை எடுத்தார். அவர் வழக்கம் போல் உணவருந்தி வருகிறார். அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணையதளத்தில் வைரலாகும் சுவாதி ராம்குமார் உரையாடல்!