Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. கைரேகை சர்ச்சை: கோர்த்துவிட்ட டாக்டர் பாலாஜி; மறுத்த சுகாதாரத்துறை செயலாளர்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (19:33 IST)
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரது கைரேகை பதிவு செய்யப்பட்ட விவகாரம் அப்போது முதல் தற்போது வரை சர்ச்சையாக உள்ளது.

 
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது அப்போதே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 
 
திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணனின் கோரிக்கைபடி டாக்டர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக இன்று டார்கர் பாலாஜி மூன்றாவது முறையாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகினார். இதற்கு முன்பு இரண்டு முறை விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான டாக்டர் பாலாஜி, ஜெயலலிதாவின் கைரேகை தனது முன்னிலையில் அவர் சுயநினைவோடுதான் பெறப்பட்டது. கையெழுத்திட முடியாததால் கைரேகை பதிவு செய்தார் என்று கூறியிருந்தார்.
 
விசாரணையில் ஜெயலலிதாவின் கைரேகையை பெற யாரும் எழுத்துப்பூர்வ ஆவணம் கொடுக்கவில்லை என்று கூறினார். இந்நிலையில் டாக்டர் பாலாஜியின் விளக்கத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் பாலாஜி கூறியதை முழுவதுமாக கேட்ட பிறகே விளக்கம் அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments