Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. கைரேகை சர்ச்சை: கோர்த்துவிட்ட டாக்டர் பாலாஜி; மறுத்த சுகாதாரத்துறை செயலாளர்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (19:33 IST)
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரது கைரேகை பதிவு செய்யப்பட்ட விவகாரம் அப்போது முதல் தற்போது வரை சர்ச்சையாக உள்ளது.

 
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது அப்போதே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 
 
திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணனின் கோரிக்கைபடி டாக்டர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக இன்று டார்கர் பாலாஜி மூன்றாவது முறையாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகினார். இதற்கு முன்பு இரண்டு முறை விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான டாக்டர் பாலாஜி, ஜெயலலிதாவின் கைரேகை தனது முன்னிலையில் அவர் சுயநினைவோடுதான் பெறப்பட்டது. கையெழுத்திட முடியாததால் கைரேகை பதிவு செய்தார் என்று கூறியிருந்தார்.
 
விசாரணையில் ஜெயலலிதாவின் கைரேகையை பெற யாரும் எழுத்துப்பூர்வ ஆவணம் கொடுக்கவில்லை என்று கூறினார். இந்நிலையில் டாக்டர் பாலாஜியின் விளக்கத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் பாலாஜி கூறியதை முழுவதுமாக கேட்ட பிறகே விளக்கம் அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments