Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா உயிரிழந்ததுக்கு திமுகவும், ஸ்டாலினும் தான் காரணம் - பழனிசாமி குற்றச்சாட்டு!

ஜெயலலிதா உயிரிழந்ததுக்கு  திமுகவும், ஸ்டாலினும்  தான் காரணம் - பழனிசாமி குற்றச்சாட்டு!
, வியாழன், 17 அக்டோபர் 2019 (17:57 IST)
முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் சென்னை  அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது அதிமுக கட்சிக்கு பெரும் இழப்பாகக் கருதப்பட்டது. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமியும் ,துணைமுதல்வராக ஓ. பன்னீர் செல்வமும் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளதாவது :
webdunia
’திமுக தொடுத்த வழக்கின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா உயிரிழந்ததற்குக் காரணமே திமுகவும், ஸ்டாலினும்தான் என நான் பகிரங்கமாக கூறுகிறேன். ஆனால் ஜெயலலிதா இறப்புக்கு நாங்கள் கவலைப்படவில்லை என ஸ்டாலின் கூறுவது கண்டிக்கத்தக்கது’ இவ்வாறு தெரிவித்துள்ளார். முதல்வர் இப்படி கூறியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதாள சாக்கடையிலிருந்து மீட்கப்பட்ட 13 அடி நீள பாம்பு..