Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் திருவள்ளுர் பல்கலைக்கழகத்தை பிரித்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் !!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (15:32 IST)
விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டமசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

 
விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை சட்ட பேரவையில் தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன்.
 
இது குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். 
 
அதன்படி, விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டமசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. வேலூர் திருவள்ளுர் பல்கலைக்கழகத்தை பிரித்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது. 
 
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தில் 8 முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments