Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா உருவப்படத்தை நீக்க உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (15:35 IST)
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் வைக்கக்கூடாது என திமுக தொடர்ந்த வழக்கில், சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
சட்டபையில் கடந்த பிப்ரவரி மாதம் 12 தேதி சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். ஆனால், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டமன்றத்தில் சிலை வைக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புதெரிவித்தன. இதனை எதிர்த்து திமுகவின் சார்பில் ஜெ.அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டசபையில் ஜெ. படம் நிறுவப்பட்டது, சபாநாயகரின் முடிவு என்பதால் சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என  தீர்ப்பளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments