Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபையில் ஜெ.வின் உருவப்படம் - சபாநாயகர் திறந்து வைத்தார்

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (10:05 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது.


 
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.வின் உருவப்படம் சட்டபையில் அமைக்கப்படும்
என கடந்த சனிக்கிழமை அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

 
ஆனால், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டமன்றத்தில் சிலை வைக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன.
 
இந்நிலையில், எதிர்ப்புகளை மீறி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஜெ.வின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட  அவரின் உருவப்படத்தை, கவின் கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்துள்ளார்.
 
பச்சை நிற சேலையில் அமைக்கப்பட்டுள்ள ஜெ.வின் உருவப்படத்தில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் முதல் பெண் தலைவராக ஜெ.வின் உருவப்படம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சட்டமன்றதில் இடம் பெறும் 11வது தலைவராக ஜெ.வின் உருவப்படம் அமைந்துள்ளது.
 
இதைத் தொடர்ந்து, சட்டமன்ற வளாகத்தில் அதிமுகவினர் இனிப்பு கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments