Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா? மு.க.ஸ்டாலின் சந்தேகம்

Webdunia
ஞாயிறு, 24 மார்ச் 2019 (09:12 IST)
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த வழக்கில், அதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பில் ஜெயலலிதாவின் கைரேகை சந்தேகத்திற்கு இடமாக இருப்பதால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.
 
இந்தந் இலையில் இந்த தீர்ப்பை சுட்டிக் காட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்ப்பின் மூலம் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணத்தில் இருந்தது ஜெயலலிதாவின் கைரேகை அல்ல என்பது உறுதியாகியிருப்பதாகவும், இதனால் இடைத்தேர்தலின்போது அவர் உயிருடன் இருந்தாரா? என்ற கேள்வி தற்போது எழுந்திருப்பதாகவும் கூறினார். மேலும் பதவியில் இருந்த ஒரு முதலமைச்சரின் மரணத்தில் மர்மம் இருப்பதால், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்தின் விசாரணை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments