Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்ற விஜய்யின் கருத்தை வரவேற்கிறோம் : ஜெயக்குமார்

Mahendran
புதன், 3 ஜூலை 2024 (12:06 IST)
நடிகர் விஜய் இன்று கல்வி விழாவில் பேசிய போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருடைய பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 
இன்று விஜய் பேசியபோது, ‘நீட் தேர்வினால் தமிழ்நாட்டின் கிராம புறத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மாணவ மாணவிகள் பாதிக்கிறார்கள் என்பது தான் சத்தியமான உண்மை .
 
மேலும் நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது, பன்முகத்தன்மை என்பது பலம் பலவீனம் அல்ல ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் பன்முகத்தன்மையை சிதைக்கிறது. நீட் தேர்வு குளறுபடியால் மக்கள் மத்தியில் நீட் தேர்வு குறித்த நன்பகத்தன்மை போய்விட்டது, நாடு முழுவதும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் இந்த செய்தி மூலம் நாம் புரிந்து கொண்டது என்று விஜய் பேசினார்.
 
இந்த நிலையில் விஜய்யின் இந்த பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் ஆதரவளித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளித்துள்ளார். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லை என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் அந்த கருத்தை வலியுறுத்தி பேசிய விஜய்யின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments