Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரேமலதா கனவில் குண்டு தூக்கி போட்ட ஜெயகுமார்!

பிரேமலதா கனவில் குண்டு தூக்கி போட்ட ஜெயகுமார்!
, சனி, 29 பிப்ரவரி 2020 (15:16 IST)
தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
ஏப்ரல் மாதத்தில் 3 மாநிலங்களவை எம்பி பதவி காலியாகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தில் அடிப்படையில் திமுக, அதிமுகவில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.   
 
தற்போது இந்த பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர்கள் ஒரு பக்கம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் எம்பிக்க்ள் யாரும் இல்லை என வர்கள் பக்கம் போர்கொடி தூக்கியுள்ளனர்.   
 
போதாத குறைக்கு தேமுதிகவும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது என செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரேமலதா சமீபத்தில் இது குறித்து பேட்டியளித்தார். 
webdunia
அதில் அவர் கூறியதாவது, தேர்தலில் கூட்டணி அமைக்கும் போது அதிமுகவினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக கூறினார்கள். நாங்கள் தர்மத்தோடு இருக்கிறோம். இன்னும் இரு தினகங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து எங்கள் உரிமையை கேட்போம் என தெரிவித்தார். 
 
எனவே இது அதிமுக தலைமைக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தேமுதிகவுக்கு இக்கட்டடாண சூழ்நிலையை உருவாக்கியுள்ளார் அமைச்சர் ஜெயகுமார். ஆம், அவர் சமீபத்திய பேட்டியில், மாநிலங்களவை எம்பி பதவியை தேமுதிகவுக்கு கொடுப்பதாக அதிமுக ஒப்பந்தம் செய்யவில்லை. பாமகவுக்கு மட்டுமே எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் செய்திருந்தது என குண்டு தூக்கி போட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வழக்கத்தை விட இந்த ஆண்டு சூரியன் அதிகமாக சுட்டெரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை