நாங்கள் தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வேண்டுமானால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்கட்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிசாமியை நோக்கி புதிய கட்சி தொடங்கட்டும் என்றும் அப்போதுதான் தெரியும் என்று கூறியுள்ளார்
	 
 
									
										
			        							
								
																	
	இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்றும் வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் தனிக்கட்சி தொடங்கும் என்றும் அவரை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்கவில்லை என்றும் பொதுக்குழு தான் நீக்கியது என்றும் தெரிவித்துள்ளார்