Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் வியாதி உள்ள அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது? ஜெயக்குமார் பதிலடி

Siva
புதன், 29 மே 2024 (07:30 IST)
அரசியல்வாதிகளுடன் விவாதம் செய்யலாம், ஆனால் அரசியல் வியாதி உள்ள வியாபாரி அண்ணாமலையுடன் எப்படி விவாதம் செய்ய முடியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவவாதி என அண்ணாமலை சமீபத்தில் பேசியது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது என்பதும் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை ’ஜெயலலிதா இந்துத்துவா தீவிரவாதி தான் என்றும் இதைப் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் அதிமுகவினர் யார் வேண்டுமானாலும் என்னுடன் விவாதம் செய்யலாம் என்றும் சவால் விட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ’அரசியல்வாதியோடு விவாதம் செய்யலாம், ஆனால் அரசியல் வியாதி உள்ள வியாபாரி அண்ணாமலையுடன் எப்படி விவாதம் செய்வது என்று பதிலடி கொடுத்தார்.

மேலும் அதிமுகவை பற்றி பேசி எங்களிடம் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை இப்படி பேசி வருகிறார் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments