Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்டவனுக்கும் பதில் சொல்ல முடியாது! – சக அதிமுக பிரமுகரை பேசிய ஜெயக்குமார்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (13:07 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து கோவை செல்வராஜ் பேசிய நிலையில் அதுகுறித்து ஜெயக்குமார் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஒற்றை தலைமை குறித்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஜெயக்குமார் கட்சி உள்விவகாரங்களை பொதுவெளியில் பேசியது தவறு என்று கோவை செல்வராஜ் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பேசினார். அப்போது கோவை செல்வராஜ் கருத்து குறித்து கேட்டபோது “தெருவில் போற கண்டவனுக்கும் பதில் சொல்ல முடியாது” என்று பேசியுள்ளார். இதனால் அதிமுகவிற்கு சலசலப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments