Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி பிடித்துள்ள பாஜக ஆபத்தானது..ஜெயக்குமார்

Mahendran
புதன், 29 மே 2024 (15:11 IST)
மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி பிடித்துள்ள பாஜக ஆபத்தானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி, அவரை களங்கப்படுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒருவரின் தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மதத் தலைவராக மாற்ற நினைப்பதுதான் பாஜகவின் எண்ணம் என ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கூறி வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சசிகலா, ஜெயக்குமார் உள்ளிட்ட பல அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் இது குறித்து விவாதம் செய்ய தயார் என்றும் அதிமுகவினர் யாரேனு தன்னுடன் விவாதிக்க தயாரா என்றும் அண்ணாமலை சவால் விட்டிருந்தார். 
 
ஆனால் அரசியல் வியாபாரி அண்ணாமலையுடன் விவாதிக்க தயார் இல்லை என அதிமுகவினர் கூறிய நிலையில் தற்போது மீண்டும் ஜெயக்குமார் அண்ணாமலைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவை அண்ணாமலை தீவிர ஹிந்துத்வா தலைவர் என்று கூறிய விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments