Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுபான்மை மக்களின் நலன்கள் குறித்து ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம்: ஜவஹருல்லா

Mahendran
வியாழன், 11 ஜனவரி 2024 (14:43 IST)
சிறுபான்மை மக்களின் நலன்கள் குறித்து ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம் என நாகையில், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவஹருல்லா  பேசியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:
 
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பயணித்தால் நாடாளுமன்றம் செல்லலாம் என சிலர் தப்பு கணக்கு போட்டு வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களின் நலன்களை பற்றி கூறும் வார்த்தைகளில் உண்மை துளியும் இருந்ததில்லை.

ALSO READ: பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை தமிழ்நாடு அரசு செய்கிறது: செல்லூர் ராஜூ
 
40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். 
 
பாஜகவுக்கு எந்தவிதமான கொள்கைகளும் கோட்பாடுகளும் இல்லை, தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை, பாஜகவின் கோட்பாடுகள் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரை செல்லக்கூடிய இடங்களில் மக்கள் எதிர்ப்பு அலை பலமாக வீசுகிறது என அவர் மேலும் பேசினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானம் பறப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்ததால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்..!

மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

மணப்பெண் சுய இன்பத்தில் ஈடுபட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு! - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி!

அடுத்த கட்டுரையில்
Show comments