Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை; மாவட்ட கலெக்டரின் அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (07:45 IST)
நாளை ஜனவரி 26 குடியரசு தின விடுமுறை என்ற நிலையில் ஜனவரி 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். 
 
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் செய்து வருகிறது.
 
இந்த நிலையில் பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார். 
 
இந்த விடுமுறையை ஈடுகட்ட வேறொரு நாள் அலுவலக நாளாக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments