Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளும் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:53 IST)
தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து பல்வேறு அறிவிப்புகளும் சலுகைகளும் வெளியாகும் என்பதை பார்த்துக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
 
ஆனால் அதே நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் செய்வோம் என்று கூறுவதை அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே செய்து வருவதால் கூடுதல் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ், விவசாய கடன்கள் தள்ளுபடி ஆகிய அதிரடி அறிவிப்புகளை அடுத்து தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்,
 
காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்த வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments