Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாபர் சாதிக் கூட்டாளி சென்னையில் கைது.. டெல்லி அழைத்து சென்றதாக தகவல்..!

Siva
புதன், 13 மார்ச் 2024 (12:00 IST)
போதைப் பொருள் கடத்திய வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஜாபர் சாதிக் கூட்டாளி சென்னையில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் டெல்லிக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் சமீபத்தில் அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்றும் அதன் பிறகு அவரிடம் விசாரணை நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை டெல்லிக்கு போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments