Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்கள் இல்லாமல் நடக்குமா குடியரசு தினவிழா ? –கலையிழந்த பள்ளிகள் !

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (08:44 IST)
ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நாளைப் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்படுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது.

வருடம்தோறும் பள்ளிகளில் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன் பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் வழக்கம். இதில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளோடு கொண்டாடி மகிழ்வர்.

ஆனால் இந்த அண்டு ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும்பாலான பள்ளிகள் கடந்த 4 நாட்களாக இயங்காமல் உள்ளன. இதனால் பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. அதனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் இந்த ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments