Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்டோ – ஜியோ வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:00 IST)
இன்று நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டம் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருனர். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமானவைகளாக பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்,  அரசுப் பள்ளிகளை மூடப் படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் ஆகியவைகளை முன்னிறுத்தினர். இது சம்மந்தமாக அந்த அமைப்பினருக்கும் அமைச்சருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக நேற்று சென்னை நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென வழக்குத் தொடர்ந்தார். அவர் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் மற்றும் மாணவர்களுக்கு இது தேர்வுக் காலம் எனவும் நீதிபதிகள் முன்னர் வாதிட்டனர்.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் ஜாக்டோ- ஜியோ அமைப்பினரிடம் வேலைநிறுத்தப் போராட்டத்தை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துக் கொள்ள இயலுமா எனக் கேள்வியெழுப்பினர். அதனை ஏற்றுக் கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments