Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..! அமலாக்கத்துறை தகவல்..!!

Sabar Sadiq

Senthil Velan

, சனி, 13 ஏப்ரல் 2024 (17:10 IST)
கடந்த 9ஆம் தேதி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
 
டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் மார்ச் 9-ம் தேதி கைது செய்தனர்.  இதை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.  இந்தச் சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

 
இதுதொடர்பாக அமலாக்கத்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “9/4/2024 அன்று சென்னை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியின் பல்வேறு இடங்களில் ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. சோதனை நடவடிக்கையின் போது, பல்வேறு குற்ற ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று பதிவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிப்பு வாங்கி கொடுத்த ராகுல்..! சகோதரரின் செயலால் நெகிழ்ச்சி..! மு.க ஸ்டாலின் ட்வீட்..!!