Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேலும் பொறுமையாக இருக்க மாட்டேன்: சசிகலாவுக்கு ஜெ.தீபா எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (12:07 IST)
இனிமேலும் பொறுமையாக இருக்க மாட்டேன் என சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு சசிகலாவும் அவருடைய உறவினர்களும் தான் காரணம் என்றும் தன்னுடைய ஆதாயத்திற்காக என்னுடைய அத்தையை சசிகலா பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஜெ தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
மேலும் என் குடும்பத்தைப் பற்றியும் என் அம்மாவைப் பற்றியும் சசிகலா பேசிக்கொண்டிருந்தால் இனியும் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
என் அம்மாவின் சாவுக்கு கூட அத்தையை வரவிடாமல் ஏமாற்றியவர் தான் சசிகலா என்றும் தன் மீது எந்த தவறும் இல்லை என சசிகலா நீதிமன்றத்தில் மக்களிடத்திலும் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். தீபாவின் இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments