Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (09:43 IST)
இன்று பகல் 12 மணிக்கு பிறகு சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதில், சென்னையின் பள்ளமான பல பகுதிகள் நீரால் சூழப்பட்டது.  மீஞ்சூர், கோவிலம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதில் வீட்டிலிருந்து பொருட்கள் சேதமடைந்தன.
 
அந்நிலையில், நேற்று மாலை சென்னையில் பலத்த மழை பெய்தது. ஆனால், இரவு 10 மணிக்கு மேல் அவ்வளவாக மழை பெய்யவில்லை. 
 
இந்நிலையில், இன்று பகல் 12 மணிக்கு மேல் சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், காலை முதலே சென்னையில் லேசான மழை பெய்யும் என கூறியுள்ளது.
 
நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்யும் எனவும், நேற்று மாலை மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் கூறியது தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments