Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை?: மௌன விரதம் கலைப்பாரா?

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (18:50 IST)
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை சசிகலா, தினகரன் குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்தியது.
 
5 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த சோதனையில் 189 இடங்களில் ரெய்டு நடந்தது. இதில் 2000 அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர். இந்த ரெய்டில் சிக்கிய ஆவணங்கள், தகவல்களை வைத்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
 
அதன்படி இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகீலா, டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் என பலருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முக்கிய கட்டமாக சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே விசாரணை நடத்தியவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களை வைத்து சசிகலா மற்றும் இளவரசியிடம் பெங்களூர் சிறைக்கு நேரடியாக விசாரணை நடத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
 
சசிகலாவிடம் சிறைக்கு சென்று விசாரணை நடத்த சிறப்பு அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் வருமான வரித்துறை விசாரணையை ஆரம்பிக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் மௌன விரதத்தில் இருக்கும் சசிகலா விசாரணைக்கு மௌனம் கலைப்பாரா என்பது கேள்விக்குறி தான்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments