Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.500 கோடி சொத்துகள் பெயர் மாற்றம்? - கிருஷ்ணபிரியாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (13:42 IST)
சசிகலா பரோலில் வெளிவந்த போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக, இளவரசியின் மகளும், விவேக்கின் சகோதரியுமான கிருஷணப்பிரியாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில், ஆபரேஷன் கிளீன் மணி என்ற பெயரில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சசிகலா குடும்பத்தினர் பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கியது. மொத்தமாக ரூ.1500 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள், கிலோக்கணக்கில் தங்க, வைரை நகைகள் சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதில், இளவரசியின் மகன் விவேக்  மற்றும் மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரின் வீட்டில் மட்டும் அதிகாரிகள் 5 நாட்கள் சோதனை நடத்தினர்.  சசிகலா பரோலில் வந்த போது கிருஷ்ணபிரியாவின் வீட்டில்தான் தங்கினார். அப்போது ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துகள் சிலரின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், கிருஷ்ணபிரியாவிற்கு முக்கிய தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
 
இந்நிலையில், கிருஷ்ணப்பிரியாவும், அவரது சகோதரி ஷகிலாவும் இன்று வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து விசாரணையில் கலந்து கொண்டனர். ஷகிலா மிடாஸ் மதுபான ஆலையை நிர்வகிப்பதில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments