அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம் தகவல்

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (14:15 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலையை மையம் எச்சரித்துள்ளது.

 
கடந்த வடகிழக்கு பருவமழையும் இயல்பான அளவான விட குறைவாகவே இருந்தது. தமிழகத்தில் பல இடங்களிலும் தற்போது வெயில் துவங்கிவிட்டது. அந்நிலையில், இலங்கை-கன்னியாகுமாரி கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. 
 
இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இதன் காரணமாகவே வருகிற 15ம் தேதி வரைக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments