Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்க யாருக்கும் கொரோனா இல்லை! யாரோ பொய் சொல்றாங்க! – ஈஷா யோகா மையம்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (11:47 IST)
ஈஷா யோக மையத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என வதந்திகள் வெளியான நிலையில் ஈஷா யோக மையம் அதற்கு விளக்கமளித்துள்ளனர்.

ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் பங்கேற்ற நிலையில், அதில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என மக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதை தொடர்ந்து ஈஷா யோக மையத்தில் உள்ள சிலருக்கு கொரோனா இருப்பதாக சமூக வலைதளங்களில் யாரோ பதிவிட அந்த தகவல் வேகமாக மக்களிடையே பரவி வருகிறது.

இந்நிலையில் தேவைப்பட்டால் ஈஷா சிவராத்திரியில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஈஷா யோகா மைய நிர்வாகம், ஈஷா யோகா மையத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தி போலியானது, போலி செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் முறையிட்டுள்ளது.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈஷா யோகா மையத்தை ஆய்வு செய்து தூய்மையாக இருப்பதாக சான்றளித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments