Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பா?

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (11:36 IST)
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் தமிழக மக்கள் மீளவில்லை இந்த நிலையில் கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு இருக்கும் நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறியும் இருந்ததை அடுத்து மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. இன்னும் அவருக்கு கொரோனா இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனை முடிவு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென அந்த பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து கடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தாரா? என்பது இந்த பரிசோதனையின் முடிவுக்கு பின்னர் தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் தற்போது கடலூரிலும் ஒரு பெண் உயிர் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments